Friday, November 20, 2009

நீரிழிவு நோயாளிகள்

நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை
பலரையும் பாதிக்கும் நோய்களில் நீரிழிவு நோயும் முக்கியமானது. நீரிழிவு நோயாளிகள் உணவு விஷயத்தில் கவனத்துடன் இருக்க வேண்டும்.நீரிழிவு நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டியவை: * மாவுச்சத்து உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதை தவிர்த்து நார்ச்சத்து உணவுகளை அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக கீரை பச்சைக் காய்கறிகளை சாப்பிடலாம். * உணவில் அரிசியைத் தவிர்த்து கோதுமை உணவு வகைகளை அதிகமாக சாப்பிட வேண்டும். * இனிப்புகள், கிழங்கு வகைகள் பொதுவாக கொழுப்புச் சத்து அதிகம் உள்ள எண்ணெய் பதார்த்தங்கள் ஆகியவைகளை தவிர்ப்பது உடலுக்கு நல்லது.* நீரிழிவு நோயாளிகள் தினமும் 30 நிமிடங்கள் நடை பயிற்சி மற்றும் மிதமான உடற்பயிற்சிகள் செய்வது நல்லது.* மதுப்பழக்கம், புகைப்பழக்கம் ஆகியவற்றை அறவே தவிர்க்க வேண்டும். உயரத்திற்கு ஏற்ற எடையைப் பராமரிக்க வேண்டும். * 30 வயதினை கடந்த ஒவ்வொருவரும் ஆண்டிற்கு ஒரு முறை நீரிழிவு நோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம். * கர்ப்பமான பெண்கள் நீரிழிவு நோய் பரிசோதனை மேற்கொள்ளுதல் அவசியம். இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது.

No comments:

Post a Comment