Friday, July 22, 2011

முருங்கைக்குதனிச் சிறப்பு


                        


மரங்களில் முருங்கைக்கு என்று தனிச் சிறப்பு உண்டு. முருங்கைக் கீரையை தினசரி உணவில் சேர்த்துக் கொண்டால் எல்லா வகையில் நமக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். முருங்கையில் காட்டு முருங்கை, தவசு முருங்கை, கொடி முருங்கை என மூன்று வகை உண்டு. இதில் காட்டு முருங்கை இலை மிகவும் கசப்புத் தன்மை கொண்டது. ஆனால் அதற்கு மருத்துவக் குணங்கள் மிக மிக அதிகம்.


பொதுவாக முருங்கையின் பூ மிகவும் சக்தி வாய்ந்தது. முருங்கைப் பூ சாப்பிட்டு வந்தால் ஆண்மைச் சக்தி அதிகரிக்கும். விந்தணு பெருகும். விந்தணு எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று சொல்பவர்கள் சாப்பிட்டால் விந்தணு எண்ணிக்கை அதிகரிக்கும். நாய்க் கடி விஷத்தைப் போக்கவும் முருங்கை பயன்படும். கிட்னி தொடர்பான பிரச்சனைகளுக்கும் முருங்கை இலை முக்கியத்துவம் வாய்ந்தது. இரத்தக்கட்டு வீக்கத்திற்கு முருங்கை இலையை அரைத்துப் பூசினால் நீங்கும்.

முருங்கைப் பூ உடல் சூட்டைக் குறைக்கும், தலைவலியைக் குறைக்கும், கால் வலி, கழுத்து வலியையும் குறைக்கும். சளி தொந்தரவையெல்லாம் முருங்கைப் பூ நீக்கும். கண் பார்வைக்கு நல்லது. முருங்கை மர‌த்‌தி‌ல் இரு‌க்கு‌ம் ‌பி‌சி‌னை பதப்படுத்தி சாப்பிட்டால் வயிற்றில் இருக்கும் நாக்குப் பூச்சிகளெல்லாம் வெளியேறிவிடும். அதனால் வீட்டில் முருங்கையை வளர்த்தால் எல்லா விதத்திலும் நல்லது. வாஸ்துப்படி முருங்கையை வீட்டின் முன்புறத்தில் வைக்கக்கூடாது. வீட்டின் பின்புறத்தில் வைத்தால் எல்லா வகையிலும் நல்லது கொடுக்கும்.

Sunday, July 10, 2011

சிப்ஸ் பீட்சா உருவாக்கும் கொழுப்பு அடிமைகள்




வாஷிங்டன்: சிப்ஸ், பீட்சா, பர்கர் உள்ளிட்ட ஜங்க் உணவுகளை அதிகம் சாப்பிட்டால் உடலில் சுரப்பிகளின் இயக்கம் தாறுமாறாகும். மூளையின் செயல்பாடுகள் படிப்படியாக பாதிக்கப்படும் என்று லேட்டஸ்ட் ஆய்வு எச்சரிக்கிறது. கொழுப்பு உணவுகளுக்கு அடிமையாகிற அபாயமும் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.



இட்லி, தோசையை விட்டு விலகி வர யோசிக்கிற ஒரு சில பெரியவர்களை விட இதர ரகத்தினர் எல்லாரையும் வசீகரித்திருப்பவை சிப்ஸ், பீட்சா, பர்கர் உள்ளிட்ட ஜங்க் புட்கள். உடல்நலத்துக்கு இவை அவ்வளவு நல்லதல்ல என்று அவ்வப்போது தகவல்கள் வெளியானபோதும், இவற்றை விட மனம் வருவதில்லை. ஜங்க் உணவுகளால் ஏற்படும் சாதக, பாதகங்கள் குறித்து அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இர்வின் பல்கலைக்கழகம், நேஷனல் அகடமி ஆப் சயின்சஸ் இணைந்து சமீபத்தில் ஆய்வு நடத்தின. இதில் தெரியவந்த தகவல்கள்:


ஜங்க் உணவுகளில் கூடுதல் சுவைக்காக பல விதங்களில் ரசாயன பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை அதிகம் சேர்ந்தால் உடல்நலம் பாதிக்கும். எதிர்ப்பு சக்தி பெருமளவு குறையும். ‘பயாலஜிகல் மெக்கானிசம்’ என்ற உடலின் இயல்பு நிலை பாதிக்கப்படும். என்டோகெனாபினாய்ட்ஸ் என்ற ஒரு விதமான ரசாயன சுரப்பு உடலில் அதிகரிக்கும். இது அதிக கொழுப்புள்ள உணவுகளை நாடும் தன்மை கொண்டது. இதனால் அத்தகைய உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும் என்ற தூண்டுதல் அதிகமாகும். செரிமான கோளாறு ஏற்படும்.


இந்த நிலை தொடர்ந்தால் உடலில் இயற்கை சுரப்பிகள் பாதிக்கப்படும். மூளைக்கு ஒழுங்காக சென்றுகொண்டிருக்கும் சிக்னல்கள் பாதிக்கப்பட்டு, உடலின் இதர செயல்பாடுகளும் படிப்படியாக பாதிக்கப்படும் அபாயம் உருவாகும்.


எலிகளை வைத்து நடத்தப்பட்ட ஆய்வில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஜங்க் உணவுகளில் அதிகம் இருக்கும் ரசாயன பொருட்களை ஊசி மூலம் எலிகளுக்கு செலுத்தி இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் பிறகு, எலிகளின் உடலில் என்டோகெனாபினாய்ட்ஸ் அளவு அதிகரித்திருந்தது. அதன் பிறகு, கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை மேலும் மேலும் விரும்பி தின்றன. எலியின் இயல்பான செயல்பாடுகள் படிப்படியாக குறைந்தன. போதை பழக்கத்துக்கு அடிமையானதை போல முடங்கி கிடந்தன. மீண்டும் ஜங்க் புட் ரசாயனம் நீக்கப்பட்ட பிறகு, எலிகள் இயல்பு நிலைக்கு திரும்பின.


இவ்வாறு ஆய்வில் தெரியவந்துள்ளது.





Friday, July 1, 2011

மார்பக புற்று நோய் வராது


                                      


டொரன்டோ: தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது பட்டால், மார்பக புற்றுநோய் வரவே வராது என்கிறார்கள் கனடா நாட்டு ஆராய்ச்சியாளர்கள்.


இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சூரிய ஒளி நம்மீது படும்போது, வைட்டமின் டி உற்பத்தி தூண்டப்படுகிறது. மார்பக செல்கள், வைட்டமின் டியை, ஒருவித ஹார்மோனோக மாற்றும் திறன் பெற்றவை. இந்த ஹார்மோன்தான், மார்பகத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. இளம், நடுத்தர, வயதான பெண்களிடம் ஆய்வுகள் நடத்தப்பட்டு இது கண்டுபிடிக்கப்பட்டது. தினமும் 3 மணி நேரம் சூரிய ஒளி நம்மீது படும்படி பார்த்துக்கொண்டால், மார்பக புற்றுநோய் ஆபத்தில் இருந்து விடுபடலாம். ஆண்களை பொறுத்தவரை, வைட்டமின் டி மாரடைப்பு போன்ற ஆபத்துகளில் இருந்து காக்கிறதாம்.