லண்டன் : வாலிப வயதுக்கு முன்பே டான்சில்ஸ், அப்பென்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்வதால் பிற்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் இருப்பதாக சமீபத்திய மருத்துவ ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.
சுவீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம், இம்ரி ஜான்ஸ்கி தலைமையில் இதுகுறித்த ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில் வெளியான தகவல்கள்:
இளம்வயதிலேயே அறுவை சிகிச்சைகள் செய்வதால் உடலின் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். குறிப்பாக 20 வயதுக்குள் டான்சில்ஸ், அப்பென்டிக்ஸ் உள்ளிட்ட அறுவை சிகிச்சை செய்வதால் பிற்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். டான்சிலெக்டமி என்ற டான்சில்ஸ் ஆபரேஷனால் 44 சதவீதமும், அப்பென்டிக்சால் 33 சதவீதமும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
இரண்டு அறுவை சிகிச்சைகளும் செய்து கொண்டவர்களுக்கு இந்த அபாயம் மேலும் அதிகரிக்கும். 20 வயதுக்குள் உள்ள 10 முதல் 20 சதவீதம் பேர் பெரும்பாலும் இத்தகைய அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கின்றனர். இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரத்த நாளங்களையும் இது பாதிக்கும் என்பதால் இதயத்துக்கு செல்ல வேண்டிய ரத்தம் மற்றும் பிராண வாயு தடைபடும். இத்தகைய நிலை தொடரும்போது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே டான்சில்ஸ் மற்றும் அப்பென்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்வது அவசியம் என்கிறது அந்த ஆய்வு.
சுவீடனின் கரோலின்ஸ்கா நிறுவனம், இம்ரி ஜான்ஸ்கி தலைமையில் இதுகுறித்த ஆய்வு மேற்கொண்டது. ஆய்வு முடிவில் வெளியான தகவல்கள்:
இளம்வயதிலேயே அறுவை சிகிச்சைகள் செய்வதால் உடலின் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்படும். குறிப்பாக 20 வயதுக்குள் டான்சில்ஸ், அப்பென்டிக்ஸ் உள்ளிட்ட அறுவை சிகிச்சை செய்வதால் பிற்காலத்தில் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். டான்சிலெக்டமி என்ற டான்சில்ஸ் ஆபரேஷனால் 44 சதவீதமும், அப்பென்டிக்சால் 33 சதவீதமும் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது.
இரண்டு அறுவை சிகிச்சைகளும் செய்து கொண்டவர்களுக்கு இந்த அபாயம் மேலும் அதிகரிக்கும். 20 வயதுக்குள் உள்ள 10 முதல் 20 சதவீதம் பேர் பெரும்பாலும் இத்தகைய அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கின்றனர். இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டு, பல்வேறு நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். ரத்த நாளங்களையும் இது பாதிக்கும் என்பதால் இதயத்துக்கு செல்ல வேண்டிய ரத்தம் மற்றும் பிராண வாயு தடைபடும். இத்தகைய நிலை தொடரும்போது மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும். எனவே, தவிர்க்க முடியாத பட்சத்தில் மட்டுமே டான்சில்ஸ் மற்றும் அப்பென்டிக்ஸ் அறுவை சிகிச்சை செய்து கொள்வது அவசியம் என்கிறது அந்த ஆய்வு.

No comments:
Post a Comment